Wednesday, November 03, 2004

காதலித்துப்பார்

காதலித்துப்பார்..
விழிக்கு இமை பாரமாகும்
விழித்திருக்கையில் விழித்திரையில்
கனவுகள் திரையிடப்படும்!
இதயத்துடிப்பு இசைத்தட்டாகும்..
ஆண்மை அர்த்தப்படும்
அதுவும் வெட்கப்படும்..
உன் பார்வை விழுந்து
கண்ணாடியும் கருத்தரிக்கும்!
உன் விருப்பப்படி
பிம்பஙளை பிரசவிக்கும்..
பாடல் வரிகள் தெளிவுபடும்
பாட வரிகள் எளிதில் தெளியாது!
முகப்பருக்கள் உன் முதல் எதிரி
அதற்கும் கேட்பாய் முதல் உதவி
உன் தனிமையை தாளித்து
கற்பனைச் சமயலுக்கு
சுவை கூட்டுவாய்..
சில இரவுகள் தண்டிக்கப்படும்
உறக்கம் துண்டிக்கப்படும்!
மலர்களின் வாசனை உணர்வாய்
தென்றலின் தீண்டல் நேசிப்பாய்
மதங்கள் வெறுப்பாய்
மனிதம் பிடிக்கும்
உன் நாளங்களுக்கு
உயிர்வலி உணர்த்துவாய்!
உன் மாற்றங்களை
மறைப்பதாய் நினைத்து
உலகிற்கு பரைசாற்றுவாய்
நிலவின் வன்மை ரசிப்பாய்
தீயின் மென்மை தீண்டுவாய்
அவளின்றி உலகம் அர்த்தப்படாது
அவளற்ற சொர்க்கம் ஆசைப்படாது!
இரவற்று பகலற்று
இயல்பற்று நகரும் நாட்கள்
செத்துப் பிழைக்கும் சக்தி
இயேசுவுக்கும் உனக்கும் மட்டும்!
காதலித்துப்பார்...
சத்தமில்லாமல் வாழ்ந்துவிட்டால்
சாவிலும் அமைதியில்லை...காதலித்துப்பார்!!

1 Comments:

Blogger Sudhakar said...

Yeah Smaara... I too got the feeling on seeing the very first line... "Kaadhalitthuppaar..."

November 24, 2004 at 11:28 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home